Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் சிக்கல்?

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (19:10 IST)
அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும் இணைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக இன்று இரவுக்குள் தேமுதிகவுடனும் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். ஆனால் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

விஜயகாந்தை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பியூஷ் கோயல், எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது என்றும், தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்து கூறவே வந்தேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் இருந்து க்ரீன்சிக்னல் வராததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் அடுத்த மாற்றாக திமுக அல்லது தினகரன் கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments