Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்குக் கொரோனா உறுதி! மளமளவென உயரும் எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (07:52 IST)
கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அங்கு வேலைப்பார்த்தவர்கள் மற்றும் அங்கிருந்து வீடு திரும்பியவர்கள் என ஒவ்வொருவராக வரிசையாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 122 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா எண்ணிக்கை 150 ஐ தாண்டியது.

இந்நிலையில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 68 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.  இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments