Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் கடைசியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள்! வெளியானது அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (07:41 IST)
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மேலும் சமூக இடைவெளியுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments