நாங்குநேரியில் குமரி ஆனந்தனா?: காங்கிரஸ் இன்று அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (09:11 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது.

தமிழகத்தின் சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக- காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. அதன்படி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் இன்று தனது வேட்பாளரை அறிவிக்க உள்ளது. தமிழக காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையுமாகிய குமரி ஆனந்தனும் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

நாங்குநேரியில் முன்னால் எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார் காங்கிரஸில் பல நாள் உறுப்பினர். தற்போது மீண்டும் பல வருட முக்கிய உறுப்பினராக இருக்கும் குமரி ஆனந்தனுக்கு சீட் வழங்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பாஜக தலைவரின் தந்தை என்ற பெயர் பெற்றிருப்பதால் அவரை நிறுத்துவது கட்சிக்கு எதிர்மறையான தாக்கங்கள் உருவாக்கலாம். மேலும் காங்கிரஸில் பலநாட்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என்ற குற்றசாட்டு தேசிய அளவில் உள்ளது. எனவே இளைய காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரையாவது நிறுத்தலாம் எனவும் காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! நாளை முதல் தீபாவளி வரை மழை பெய்யும்: வியாபாரிகள் சோகம்..!

சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: மீண்டும் போர்க்கொடி தூக்கும் வேல்முருகன்..!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. கேரள தேர்தலில் போட்டியா?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதிர்ப்பு: நார்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments