Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்குமா?

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்குமா?
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (08:01 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகின்றனர் 
 
 
குறிப்பாக அதிமுக இந்த இரண்டில் ஒரு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்த நிலையில் இரண்டில் ஏதாவது ஒன்றை கைப்பற்றினால் கூட தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என அதிமுக தலைமை கருதுகிறது
 
 
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற 50 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளாத அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து வருகின்றன. அதேபோல் திமுக தரப்பில் இருந்தும் அதிகமாக செலவு செய்து விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது 
 
 
இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி அதிக பட்ஜெட்டில் தொகுதிகளில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதால் இந்த இரண்டு தொகுதி மக்களுக்கும் ஜாக்பாட் தீபாவளியாக இந்த ஆண்டு இருக்கும் என கருதப்படுகிறது
 
 

webdunia
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா எல்லை மீறினால் ஆர்கேநகர் தேர்தலை ரத்து செய்தது போல், இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வில் மேலும் இரண்டு பேர் ஆள்மாறாட்டமா? அதிர்ச்சி தகவல்