Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜேந்திர பாலாஜியா ? – கலக்கத்தில் நாங்குநேரி அதிமுகவினர் !

ராஜேந்திர பாலாஜியா ? – கலக்கத்தில் நாங்குநேரி அதிமுகவினர் !
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:48 IST)
நாங்குநேரி தேர்தல் பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அனுப்ப வேண்டாம் என அதிமுகவினர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி தேர்தல் பணிக்கு விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக சர்ச்சையாகப் பேசிவரும் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக வுக்கு தர்மசங்கடமாக சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இதுபோலவே பேசினால் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இதனால் அதிமுக தலைமைக்கு இந்த கருத்தை எப்படி தெரிவிப்பது என குழப்பத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’12 லட்சம் கோடி’ ஊழலுக்கா ? ப. சிதம்பரம் டுவீட்டுக்கு ஹெச். ராஜா கிண்டல்...