சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:02 IST)
சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 மற்றும் 50 என மொத்தம் 75 ரூபாய் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டதால் தற்போது 785 ரூபாய் என சிலிண்டர் விலை விற்பனையாகி வருகிறது
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை அடுத்து மதுரை அலங்காநல்லூர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர் 
 
இந்த ஊர்வலத்தில் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன போராட்டம் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments