Publish Date: Mon, 28 Mar 2022 (19:39 IST)
Updated Date: Mon, 28 Mar 2022 (19:43 IST)
தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரரியில் டி-பார்ம் 4 ஆம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதால் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு முன்னதாக தன்னால் படிக்க முடியவில்லை எனவும், நீங்கக்ள் பணம் கட்டி என்னால் கஷ்டப்படுவதாகவும் அதனால் உங்களை விட்டுச் செல்வதாகவும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளதாக காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.