Publish Date: Sat, 05 Feb 2022 (21:27 IST)
Updated Date: Sat, 05 Feb 2022 (21:28 IST)
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்த போது, மாளவிகா காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது.