Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மேஜர் தயான் சந்த் விருது''க்கு தேர்வான சரத் கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (22:09 IST)
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் சாதனை படைத்த வீரர்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு, விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தன.

அதன்படி, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத் கமல் தேர்வாகியுள்ளார்.

அதேபோல், அர்ஜூனா விருதுகு சிமா புனிமாவும்( தடகளம்)பக்தி பிரதீப் குல்கர்னி விருதுக்கு பிரக்யானந்தாவும்( செஸ்). அஷ்னி விருதுக்கு சரிதா (மல்யுத்தம்)  உள்ளிட்ட பல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத் கமல் தேர்வாகியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’#B2022-இல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த @sharathkamal1 அவர்கள் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் #KhelRatna விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன் ’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments