Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (21:57 IST)
அமெரிக்க நாட்டின் விர்ஜீனிய பல்கலைக்கழக வளாகத்தில்  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற பல்கலைக்கழமான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்,  நேற்றிரவு புகுந்த பல்கலைக்கழக மாணவர் கிரிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என்பவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியவரின் புகைப்படத்தை போலீஸார் பொதுமக்களுக்கு வெளியிட்டி வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வகுக்குகள் சில நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments