Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடபழனியில் 12 தளங்களில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Advertiesment
சென்னை மெட்ரோ

Mahendran

, புதன், 11 ஜூன் 2025 (10:08 IST)
சென்னை வடபழனியில் 12 தளங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
வடபழனியை முற்றிலும் மாற்றியமைக்கும் கட்டடமாக இது இருக்கும் என்றும், வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
12 தளங்களுடன் பார்க்கிங் வசதி, உணவு மையம், வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் என பல்வேறு வசதிகளுடன் அமைய இருக்கிறது என்றும், தரைத்தளத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும், மாடியில் சோலார் பேனல் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதில் தரைத்தளத்தில் பேருந்து நிலையமும், முதல் தளத்தில் பைக்குகள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளன. இதனை அடுத்து, 10 தளங்களில் கார்ப்பரேட் அலுவலகங்கள், ஓய்வறைகள், வணிக வளாகங்கள், அனிமேஷன், கேமிங் துறையின் அலுவலகங்கள் ஆகியவை அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ஐந்தாவது தளத்தில் உணவு மையம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிராட்வே பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக பல அடுக்குகளாக கட்டப்பட இருக்கும் நிலையில், தற்போது வடபழனியிலும் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள் உணவு கிடையாது.. அது ஆபத்து! அவங்க சொல்றதை கேக்காதீங்க! - கிருஷ்ணசாமி கோரிக்கை!