Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

Advertiesment
சென்னை விமான நிலையம்

Siva

, செவ்வாய், 22 ஜூலை 2025 (11:21 IST)
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 300 முன்பதிவு  டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த  டாக்சிகளுக்கு விரைவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி தொடங்கப்பட உள்ளது.  இந்த முன் பதிவு டாக்சிகள் விமான நிலைய அதிகாரிகளின் ஒப்புதலுடனும், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்பவும் இயக்கப்பட்டு, பயணிகளிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை, இந்த முன் பதிவு டாக்சிகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்ய எந்த வசதியும் இல்லை. இதனால், விமானங்களில் இருந்து வெளியே வரும் பயணிகள், முன் பதிவு டாக்சி கவுண்டர்களுக்குச் சென்று, பதிவு செய்துவிட்டுத்தான் பயணிக்க வேண்டியிருந்தது. எனவே, பயணிகள் கவுண்டருக்கு செல்ல அலைந்து திரிய வேண்டியிருந்தது.
 
இந்தச் சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வை வழங்கும் வகையில், சென்னை விமான நிலைய முன் பதிவு டாக்சி சங்கம் பயணிகளுக்காக ஒரு புதிய ஆன்லைன் முன்பதிவு வசதியை தொடங்க உள்ளது. பயணிகள் எங்கிருந்தும் "சென்னை விமான நிலைய முன் பதிவு டாக்சி ஆன்லைன் முன்பதிவு" என்ற செயலியை பயன்படுத்தி எளிதாக முன் பதிவு டாக்சிகளை முன்பதிவு செய்ய முடியும். இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் முன் பதிவு டாக்சிகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதுய்.
 
இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு, ஒரு QR குறியீடு தோன்றும். அந்தக் குறியீடு மூலம் பயணிகள் பயணம் செய்ய விரும்பும் நாள், இடம், நேரம் ஆகியவற்றை பதிவு செய்யலாம். முன் பதிவு டாக்சி கட்டணங்கள் குறித்த தகவல்களும் தோன்றும். ஆன்லைன் மூலமாகவே பயணிகள் கட்டணங்களையும் செலுத்த முடியும்.
 
பயணிகள் பிக்அப் பாயிண்டிற்கு வந்து, தங்களின் ஆன்லைன் முன்பதிவு விவரங்களை முன் பதிவு டாக்சி ஊழியர்களிடம் காட்டினால் போதும். உடனடியாக, பயணிகளுக்கு டாக்சிகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்குகளை எளிதாக அடைய முடியும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!