Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

Prasanth Karthick
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:06 IST)

இன்று சென்னையின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

 

திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பைக்கில் சென்ற மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன், கிண்டியில் எம்.ஆர்.இ மைதானத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரி பெண்ணிடம் 1 கிராமும், பள்ளிக்கரணையில் பெண்ணிடம் 1 சவரன் நகையும் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 1 மணி நேரத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தலைநகரமான சென்னையில் காலையிலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments