Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:01 IST)
இந்திய பங்குச் சந்தையை கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், நேற்றும் இன்றும் உயர்ந்து, தொடர்ந்து 7 நாட்கள் உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே உயர்ந்து வருகிறது. சற்று முன், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 146 புள்ளிகள் உயர்ந்து 78,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 27 புள்ளிகள் உயர்ந்து 23,688 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் டெக் மகேந்திரா, டி.சி.எஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், பாரதி ஏர்டெல், ஐடிசி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் குறைந்து கொண்டிருக்கின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments