Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களுக்கு 25 ஆண்டு தடை: அமைச்சர் ஜெயகுமார்

Advertiesment
தேர்தல்
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (22:45 IST)
தேர்தலின்போது பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜெயகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது யாரால் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் தெரியும்,. இது திமுகவுக்கு ஒரு நல்ல பாடம்.
 
பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 
 
திமுக, அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் 1000 கோடி, 2000 கோடி அடித்துள்ளனர். ஆனால் மக்களுக்கு கொடுப்பது 100 ரூபாய், 200 ரூபாய் மட்டுமே. மக்களை பண ஆசை காட்டி ஏமாற்றி வரும் இவர்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தேர்தல் ரத்து என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு