Publish Date: Tue, 24 Nov 2020 (21:51 IST)
Updated Date: Tue, 24 Nov 2020 (21:55 IST)
நிவர் புயல் வங்க கடலில் உருவாகியுள்ள நிலையில் இந்த புயல் நாளை மாலை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நாளை புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் தடைபட்ட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நிவர் புயலால் மின் தடை ஏற்பட்டாலும் தொலைதொடர்பு துறை சேவை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்தது
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கன மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மிதந்த நிலையில் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் முடங்கியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மட்டும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை ஏற்படும் புயலின் காரணமாக மற்ற தொலைத்தொடர்புகள் துறைகள் சேவை பாதிக்கப்பட்டாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது