Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவர் புயல் எதிரொலி: டாஸ்மாக் நாளை விடுமுறையா?

நிவர் புயல் எதிரொலி: டாஸ்மாக் நாளை விடுமுறையா?
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:29 IST)
புயல் எச்சரிக்கையால் டாஸ்மாக்  மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நிவர் புயல் காரணமாக சேதம் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் நாளை அரசு பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவர் புயல் காரணமாக ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கியுள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் நிவர் புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்  கோரிக்கை வைத்துள்ளது 
 
ஆனால் இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் விரைவில் டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!