Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவர் புயல் : நாளை அனைத்து வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை !

நிவர் புயல்  : நாளை அனைத்து வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை !
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (19:09 IST)
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அடுத்த 12 மணிநேரத்தில் இது அதிதீவிரப் புயலாக வலுவடைவதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு  5 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக்வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1557 பேர்களுக்கு கொரோனா