Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:51 IST)
நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் புயல் நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிய சோதனைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா நிவாரண முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்தெந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும்: வானிலை ஆய்வு மையம்!