Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக் கடல் புயல் சின்னம் 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக' மாறியது: கரையை கடக்கும் நகர்வு!

Advertiesment
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

Mahendran

, செவ்வாய், 21 அக்டோபர் 2025 (12:24 IST)
வங்கக் கடலில் உருவான வானிலை சுழற்சி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் முன்னர் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்துக்குள் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடற்கரை பகுதியை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ச்சியாக மழைப்பொழிவு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!