Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

Advertiesment
மும்பை காவல்துறை

Mahendran

, செவ்வாய், 21 அக்டோபர் 2025 (10:26 IST)
தீபாவளி பண்டிகையை ஒட்டி, மும்பை காவல்துறை நெகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையாக காணாமல் போன மற்றும் திருடுபோன 800 மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது. 
 
திருடுபோன உடைமைகளை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் பிரத்யேக நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது "சிறப்புத் தீபாவளிப் பரிசாக" வழங்கப்பட்டது.
 
கிழக்கு பிராந்திய கூடுதல் காவல்துறை ஆணையர் டாக்டர் மகேஷ் பாட்டீல் மற்றும் மண்டலம் 6 துணை ஆணையர் சமீர் ஷேக் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் இந்த 800 மொபைல் போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
 
மும்பை காவல்துறையின் இந்த செயல்பாடு குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் "மிகவும் மனதைக் கவர்கிறது," "வீரர்களுக்கு சல்யூட்" என்று பாராட்டி வருகின்றனர். "மும்பைவாசிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஒலிக்கச் செய்யும் செயல்" என்று காவல்துறை இதனைப் பதிவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?