Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.பி வேட்பாளர்களுக்கு எதிராக முறையீடு! எடப்பாடியார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! - அடுத்தடுத்து பரபரப்பு!

Prasanth K
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:42 IST)

இன்று மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய எம்.பிக்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக 2 வேட்பாளர்களை பங்களிக்க முடியும். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூர்யமூர்த்தி என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இந்த வேட்புமனுக்களை ஏற்க கூடாது என அவர் கோரிக்கை விடுத்த நிலையில், தேர்தல் அதிகாரி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வெடிக்குண்டு நிபுணர்கள் வீட்டை சோதனையிட்ட நிலையில் அது புரளி என தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments