Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

Advertiesment
ராஜ்யசபா

Mahendran

, திங்கள், 9 ஜூன் 2025 (18:20 IST)
ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்திலிருந்து ஆறு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து ஆறு பேர் மட்டுமே போட்டியிட்டால், போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்றும், அதற்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், திமுக சார்பில் கமல்ஹாசன், வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகிய நான்கு பேரும், அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இரண்டு பேர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 
மேலும், ஏழு சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு வேட்பாளரின் மனுவில் குறைந்தது 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற அடிப்படையில், சுயேச்சைகள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இதன் அடிப்படையில், தற்போது ஆறு பேரின் மனுக்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து, அனைத்து ஆறு பேரும் போட்டியின்றி ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!