Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீப் பிரியாணி விவகாரம் ; ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

Advertiesment
biriyani
, வியாழன், 12 மே 2022 (17:24 IST)
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூரில் நாளை பிரியாணி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரியாணி திருவிழாவில் பல்வேறு வகையான பிரியாணிகளும் இடம்பெறும் நிலையில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாவிட்டால் பீப் பிரியாணி செய்து திருவிழா நடக்கும் மைதானத்தின் முன்னே அனைவருக்கும் இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தப்படும் என விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மழை அறிவிப்பு காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்” – இலங்கை நிவாரண பையில் இடம்பெற்ற வாசகம்!