Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதுநிலை நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை- தேசிய தேர்வுகள் வாரியம்

முதுநிலை   நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை- தேசிய தேர்வுகள் வாரியம்
, சனி, 7 மே 2022 (17:59 IST)
முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வில்லை என தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான முது நிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட  நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், முதுநிலை நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை ; வரும் 21 ஆம் தேதி கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மேலும்,தேர்வுகள் குறித்த அறிவிப்பு தங்களின் அதிகாரப்பூர்வ இணயதள பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசானி புயல்: 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை