Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் சிக்னல் கோளாறு: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (19:35 IST)
தமிழகத்தில் ஏர்செல் சேவை இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 
 
ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் முதலில் தெரிவித்தது.
 
அதன்பின்னர், ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை வேறு நெட்வொர்ட் நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றனர். 
 
இந்நிலையில், தற்போது ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாலர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
இது குறித்து ஏர்டெல் கூறியதாவது, சிக்னல் பிரச்சனை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யவும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments