Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று - ஒலி மாசு குறைவா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று - ஒலி மாசு குறைவா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
, ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:10 IST)
சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து வருவதன் காரணமாக காற்று மற்றும் ஒலி மாசு குறைவு ஏற்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த அறிவிப்பை ஒரு சில பொதுமக்கள் மீறினாலும் பெரும்பாலான பொதுமக்கள் கடைபிடித்ததன் காரணமாக கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று மற்றும் ஒலி மாசு இந்த ஆண்டு குறைவாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது
 
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு குறைவு இல்லாமல் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷா வருகை பலரை நடுங்க வைக்கும்: பில்டப் கொடுக்கும் முருகன்!