சுந்தர்பிச்சை தமிழர், ஆனால் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவில் முதலீடு செய்வது ஏன்? தங்கமணி

Siva
வியாழன், 16 அக்டோபர் 2025 (15:53 IST)
சட்டப்பேரவையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி "கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தமிழராக இருந்தும், கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர பிரதேசத்திற்கு சென்றதற்கு தி.மு.க. அரசின் முயற்சி இன்மையே காரணம்" என்று குற்றம் சாட்டினார்.
 
இதற்குப்பதிலளித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இதில் விவாதிக்க விரும்பாத பல விஷயங்கள் உள்ளன. தமிழக அரசு விரைவில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான ஃபாக்ஸ்கான் முதலீட்டை பெறுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்றார்.
 
ஃபாக்ஸ்கானின் ஒரு கிளை மட்டுமே முதலீடு செய்ய மறுத்தது; ஒட்டுமொத்த முதலீடும் தவறு இல்லை. தி.மு.க. ஆட்சியில் 14,000 பொறியியல் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளதால், இதுபோன்ற முயற்சிகளை கேலி செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments