Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பதில் தாமதமா? பரபரப்பு தகவல்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (14:00 IST)
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்ப அலை வீசி வருகிறது. எனவே அறிவித்தபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
கோடை வெயில் தாக்கம் குறையாத பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அதிகாரிகளுடன் நாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments