Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை முதல்வருடன் பயணித்ததில் மகிழ்ச்சி! – குஷ்பூ மகிழ்ச்சி ட்வீட்!

துணை முதல்வருடன் பயணித்ததில் மகிழ்ச்சி! – குஷ்பூ மகிழ்ச்சி ட்வீட்!
, சனி, 30 ஜனவரி 2021 (16:04 IST)
மதுரையில் நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பாஜகவை சேர்ந்த குஷ்பூ ஒன்றாக பயணித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோவிலை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விமானம் மூலமாக மதுரை சென்றனர். அதே விமானத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றிற்காக குஷ்பூவும் மதுரை சென்றார். குஷ்பூவும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அருகருகே அமர்ந்து சென்ற நிலையில் அந்த புகைப்படத்தை குஷ்பூ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “மாண்புமிகு துணை முதல்வர் ஓ..பன்னீர்செல்வத்துடன் பயணித்ததில் மகிழ்ச்சி. படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தற்கு நன்றி சார்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்! இணையத்தை முடக்கும் மத்திய அரசு! – அதிரடி நடவடிக்கையா?