Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப சிதம்பரம் வீட்டில் கொள்ளை – குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை !

ப சிதம்பரம் வீட்டில் கொள்ளை – குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை !
, செவ்வாய், 30 ஜூலை 2019 (14:26 IST)
ப சிதம்பரம் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாகக் கூறப்பட்ட பார்வதி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. ப சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தபோது கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ரூ.1.10 லட்சம் பணம், மற்றும் தங்க நகைகள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்டவை திருடு போயுள்ளது. இது சம்மந்தமாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான விசாரணையில் அந்த வீட்டில் வேலை செய்த விஜயா மற்றும் வெண்ணிலா ஆகிய இருவரும் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பணம், நகைகளை திரும்பித் தர ஒப்புக் கொண்டதால் காவல் நிலையத்தில் அளித்த புகார் திரும்ப பெறப்பட்டது. ஆனால் இன்னமும் பணம் நகைகளைக் கொடுக்கவில்லை.

இருவரும் பணம் மற்றும் நகைகளை பாண்டி பசாரில் வசித்து வரும் பார்வதி என்பரிடம் கொடுத்திருப்பதாகப் போலீசில் கூறியுள்ளனர். வழக்கு சம்மந்தமாக விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரைப் போலிஸார் அழைத்து சென்றுள்ளனர். விசாரணை முடிந்து நள்ளிரவு அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழைப்பழ விவகாரத்தை வைத்து வியாபாரம் செய்யும் நிறுவனங்கள்