Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18-வது நபர் கைது.! ஆற்காடு சுரேஷின் உறவினர் என தகவல்.!!

Armstrong

Senthil Velan

, வெள்ளி, 26 ஜூலை 2024 (21:56 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. 
 
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர்  போலீசாரின் என் கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர், கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த வழக்கில் இதுவரை பிரதீப்புடன் சேர்த்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி.. பாஜக அதிர்ச்சி..!