Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்..!

Siva

, திங்கள், 22 ஜூலை 2024 (15:19 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை தனிப்படை போலீஸ் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து  தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்றுள்ளதாகவும், அவர்கள் சம்போ செந்திலை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் சுறுசுறுப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர் என்பது தெரிந்தது 
 
குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் சென்று இந்த கொலைக்கு காரணமான ஒருவரையும் விடமாட்டோம் என்று உறுதியளித்ததை அடுத்து தீவிரமாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு.. பா ரஞ்சித் ஏமாற்றமா?