Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

Advertiesment
Electric Train

Siva

, வியாழன், 5 ஜூன் 2025 (07:48 IST)
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் இன்றும், ஜூன் 7ஆம் தேதியும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:  சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. 
 
இதனால், இப்பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். 
 
அதேபோல் கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
 
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன
 
எழும்பூா் - புதுச்சேரி  ரயில்: இதற்கிடையே எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைக்கும் பணிகள் ஜூன் 5 முதல் ஆக. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 
 
இதனால் அந்த நாள்களில் எழும்பூரிலிருந்து காலை 6.24-க்கு புதுச்சேரிக்கு செல்லும்  மெமு பயணிகள் ரயில் (எண்: 66051) எழும்பூருக்கு பதிலாக கடற்கரையிலிருந்து காலை 6.25-க்கு புறப்படும். மறுமாா்க்கமாக புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 66052) கடற்கரை வரை இயக்கப்படும். 
 
இந்த ரயில் இருமாா்க்கத்திலும் கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!