சிலை திருட்டுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதா? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

Siva
செவ்வாய், 11 நவம்பர் 2025 (13:39 IST)
தமிழக கோயில்களில் நடந்த சிலை திருட்டுகள் மற்றும் அது தொடர்பான விசாரணை ஆவணங்களை கையாண்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
வழக்கறிஞர் யானை ஜி. இராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சிலை திருட்டு தொடர்பான முக்கியமான வழக்கு கோப்புகள் "காணாமல் போய்விட்டன அல்லது எரிக்கப்பட்டுவிட்டன" என்று குற்றம் சாட்டினார்.
 
இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மற்றும் தமிழக உள்துறைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மேலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
முன்னதாக, 376 திருட்டு சிலைகள் தொடர்பான 41 கோப்புகள் காணாமல் போனது குறித்து நீதிமன்றம் தமிழக அரசை சாடியது குறிப்பிடத்தக்கது. கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமை அரசிடம் உள்ளது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விநாயகர் சிலை குறித்து கேள்வி கேட்ட எலான் மஸ்க்.. Grok கூறிய அசத்தலான பதில்..!

சதிகாரர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.. பூடானில் இருந்து உறுதிமொழி கொடுத்த பிரதமர் மோடி..!

ராஜபாளையம் கோவிலில் இரட்டை கொலை.. பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.. ஈபிஎஸ்

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஒரு பெண் மருத்துவரா? சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ஒரே உடலில் பாதி ஆண், பாதி பெண்.. அபூர்வ சிலந்தியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments