கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Mahendran
திங்கள், 6 ஜனவரி 2025 (12:59 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து 18 பேர் தாக்கல் செய்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது   கள்ளக்குறிச்சி கள்ளச்சார வழக்கில் 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
கைதானவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், இனி அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதில் என்ன தேவை உள்ளது? என நீதிமன்றம் கேள்வி. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments