மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு சில அரசியல் கட்சிகள் இடையூறு செய்வதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அமித் ஷா வெளியிட்ட பதிவில், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊடுருவலை தடுக்கவும் வாக்காளர் பட்டியலில் தூய்மைப்படுத்தும் பணி அவசியம் என்று வலியுறுத்தினார்.
அவரது இந்த கருத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , இந்த திருத்த பணியானது திட்டமிடப்படாத, குழப்பமான மற்றும் ஆபத்தானது என்று தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியதை தொடர்ந்து வந்துள்ளது.
மம்தா பானர்ஜி தனது கடிதத்தில், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அதிக அழுத்தம் இருப்பதாகவும், போதுமான பயிற்சி மற்றும் தளவாட ஆதரவு இல்லாததால் உண்மையான வாக்காளர்களின் உரிமை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்திருந்தார்.
பாஜக தரப்பில், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டு, ஊடுருவல் அரசியலை அம்பலப்படுத்தும் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தடுக்க அவர் முயற்சிப்பதாக பதிலளிக்கப்பட்டது.