Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏர் இந்தியா விமானம் செல்லும் வழியில் வெடித்து சிதறிய எரிமலை! மீண்டும் டெல்லிக்கு திரும்பியது!

Advertiesment
Flight

Prasanth K

, புதன், 18 ஜூன் 2025 (10:57 IST)

சமீபமாக அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்தாகி வரும் நிலையில் இன்றும் பாலி சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளது.

 

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் விமானம் புறப்படும் முன்னர் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதனால் கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் கடைசி நேரக் கோளாறு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பிவிடப்படுவது, ரத்து செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

 

இந்நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் இருந்து தீவு நாடான பாலிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. ஆனால் அப்பகுதியில் எரிமலை வெடித்துள்ளதால், மோசமான வானிலை சூழல் நிலவுகிறது. இதனால் புறப்பட்டு பாதி தூரம் பயணித்திருந்த விமானம் எச்சரிக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கே திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!