கேரள மாநிலம் திருச்சூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ விஷ்ணு மாயா கோயில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 38 வயதுப் பெண் ஒருவர், தனது குடும்பப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடி இந்த கோயிலுக்கு வந்துள்ளார். அண்மையில் கணவனை இழந்திருந்த அவர், கோயிலின் தலைமை பூசாரி உன்னி தாமோதரனை சந்தித்து தனது சிரமங்களை விவரித்துள்ளார். சிறப்பு பூஜைகள் மூலம் சிக்கல்கள் தீரும் என பூசாரி உறுதியளித்துள்ளார்.
பூசாரி குறிப்பிட்ட நாளில் அந்த பெண் மீண்டும் பெங்களூரிலிருந்து கேரளா வந்துள்ளார். பூசாரியின் உதவியாளர் அருண் அவரை அழைத்து சென்று, கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தங்க வைத்துள்ளார். அங்கு வைத்து, தலைமைப் பூசாரியும் உதவியாளர் அருணும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருச்சூர் வந்து தீவிர விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கோவில் ஊழியர் அருண் கைது செய்யப்பட்டார். ஆனால், தலைமைப் பூசாரி உன்னி தாமோதரன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.