Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொத்தம் 57 ஆயிரம் கோடி... கட்டி முடிக்க 15 வருஷம் டைம் கேட்கும் வோடபோன்!!

மொத்தம் 57 ஆயிரம் கோடி... கட்டி முடிக்க 15 வருஷம் டைம் கேட்கும் வோடபோன்!!
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:00 IST)
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு வோடபோன் கோரியுள்ளது. 
 
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அறிவிப்புன் ஒன்றை வெளியிட்ட தொலைத்தொடர்பு துறை நள்ளிரவுக்குள் நிலுவை தொகையை செலுத்த சொல்லி உத்தரவிட்டது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நள்ளிரவுக்கு அவ்வளவு தொகையை செலுத்த முடியவில்லை.
 
15 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வர வேண்டிய நிலுவை தொகை 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் கடந்த 17 ஆம் தேதி அரசுக்கு 2500 கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தியது. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் நிலுவை தொகையில் 3500 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாக் தெரிகிறது. 
 
இந்நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய மீதத்தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறும் வோடபோன் கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மொத்த வருவாயில் 8 விழுக்காடாக உள்ள கட்டணத்தை 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
 
வோடபோன் நிறுவனம் அரசுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஸில் சிக்கிய பிரசாந்த் கிஷோர்: 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!