Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (08:14 IST)
பஞ்சாபில் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காய்கறி வியாபாரி ஒருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில், சுக்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் காய்கறி வியாபாரி ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சுக்விந்தர் கவுர் அந்த வியாபாரியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக கோபமடைந்த அந்த வியாபாரி, பெட்ரோலை எடுத்துக்கொண்டு வந்து, சுக்விந்தர் கவுரின் வீட்டிற்குத் தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சுக்விந்தர் கவுர் மற்றும் அவரது வீட்டில் இருந்த இரண்டு பேர் என மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள காய்கறி வியாபாரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்