வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

Mahendran
திங்கள், 24 நவம்பர் 2025 (17:14 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர் பகுதியில், வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதில் முதலாமாண்டு நர்சிங் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்டெர்லின் எலிசா ஷாஜி மற்றும் ஜஸ்டின் ஜோசப் ஆகிய இருவரும் பெங்களூருவில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த மாணவர்கள் இருவரும் தங்கள் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தபோது, சிக்கபனாவரா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.
 
அப்போது, பெங்களூருவிலிருந்து பெலகாவி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்த மரணங்கள் விபத்தா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிய, ரயில்வே போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக பெங்களூரு கிராமப்புற ரயில்வே காவல் நிலையத்தில் 'இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments