Publish Date: Thu, 27 Oct 2022 (19:27 IST)
Updated Date: Thu, 27 Oct 2022 (19:29 IST)
வீட்டில் தயாரிக்கப்பட்ட டீயை குடித்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவாநந்தன் என்பவரது மனைவி வீட்டில் டீ போட்டு குடும்பத்தினருக்கு அளித்துள்ளார். அந்த குறித்த அவருடைய இரண்டு குழந்தைகளும் குடித்ததையடுத்து சுருண்டு விழுந்து பலியாகினர்
மேலும் டீயை குடித்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷிவாநந்தன் மனைவி தயாரித்த அந்த டீயில் பூச்சிகளை கொல்லும் மருந்து தவறுதலாக கலந்து விட்டதாகவும் இதனால் தான் இப்படி ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்