Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர், கண்டக்டர் பரிதாப பலி!

Advertiesment
dead
, புதன், 26 அக்டோபர் 2022 (18:53 IST)
பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தில் தீ பற்றியதால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி அருகே பேருந்து கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் பேருந்துக்குள் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாடினார்
 
அதன்பிறகு இருவரும் பேருந்திலேயே உறங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென விளக்கின் தீ காரணமாக பேருந்து தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் கண்டக்டர் டிரைவர் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் மது போதையில் இருந்ததால் பேருந்து தீயில் இருந்து அவர்கள் பலியாகினர் என தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கணவர் கைது!