Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் பாதிப்பு 830; ஒருவர் மட்டுமே பலி! – கொரோனாவிலிருந்து இந்தியா விடுதலை!

ஒரு நாள் பாதிப்பு 830; ஒருவர் மட்டுமே பலி! – கொரோனாவிலிருந்து இந்தியா விடுதலை!
, புதன், 26 அக்டோபர் 2022 (10:19 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து தினசரி ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 830 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,45,768 ஆக உயர்ந்துள்ளது.


ஒரே நாளில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,981 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,95,180 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 21,607 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரகணத்தின் போது சூரியனை கடந்த விமானம்! – வைரலாகும் வீடியோ!