ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து… 233 பயணிகள் பலி...900 பேருக்கு மேல் காயம்

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (08:27 IST)
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஒடிசாவின் பால்ஷோர் என்ற பகுதியில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

இந்த ரயில்கள் மோதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது யஸ்வந்தர் ரயில் மோதி விபத்தில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.

இப்போது மீட்புப்படையினரும் போலீஸாரும் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.  மருத்துவக்குழுவும் சம்பவ இடத்தை அடைந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 900 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த கோர விபத்து செய்தி நாடு முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments