Publish Date: Tue, 31 May 2022 (09:32 IST)
Updated Date: Tue, 31 May 2022 (09:34 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்செக்ஸ் இருந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்தில் உள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் 500 புள்ளிகள் இறங்கி 55 ஆயிரத்து 390 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 16500 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது