Publish Date: Mon, 23 May 2022 (09:45 IST)
Updated Date: Mon, 23 May 2022 (10:00 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1500 புள்ளிகள் உயர்ந்ததல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது. சற்றுமுன்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 550 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 16315 என்ற முறையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது