Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தியா!

3 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தியா!
, ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:35 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,90,991 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,15,850 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,37,072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 38,069 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீசனுக்கே முன்பே அதிகரிக்கும் வெயில்! – இளநீர், தர்பூசணி வியாபாரம் மும்முரம்!